tag:blogger.com,1999:blog-38193743355317304282024-03-12T17:32:41.962-07:00நல்வாழ்வு testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3819374335531730428.post-89944924929552118352013-10-25T04:19:00.002-07:002013-10-25T04:19:23.010-07:00 கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.<br />
2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.<a name='more'></a><br />
3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.<br />
4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.<br />
5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.<br />
6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.<br />
7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)<br />
8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்<br />தான் நடத்துகின்றனர்.<br />
9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.<br />
10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.<br />
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.</div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3819374335531730428.post-10112771724495348202013-10-25T03:47:00.001-07:002013-10-25T03:49:29.574-07:00கணவன் மனைவி ஆசை குறைகிறது ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-CTNUwZq31rg/UmpMLW6tb7I/AAAAAAAAAZg/36XMSoNjw3o/s1600/mqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="225" src="http://4.bp.blogspot.com/-CTNUwZq31rg/UmpMLW6tb7I/AAAAAAAAAZg/36XMSoNjw3o/s400/mqdefault.jpg" width="400" /></a></div>
கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.<br />
<a name='more'></a>இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும். நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து %கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 % பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?'-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''. நேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும். இந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும். <br />
<br />
பலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன. திருமணத்திற்கு முந்தைய உறவுகள்: திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்குள்ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்ளும் போது அந்த உறவினை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழுமையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடிக்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள். உடற்கூறு அறிவின்மை: ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகி றார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது. இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். </div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3819374335531730428.post-88259581595597091032013-10-25T03:38:00.000-07:002013-10-25T03:42:44.624-07:00குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://3.bp.blogspot.com/-M2wfPGtgipA/UmpLFBJ41YI/AAAAAAAAAZY/qOOHQu5TJP8/s1600/vallachira%2520p.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="http://3.bp.blogspot.com/-M2wfPGtgipA/UmpLFBJ41YI/AAAAAAAAAZY/qOOHQu5TJP8/s400/vallachira%2520p.jpg" width="400" /></a></div>
இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்!<br />
<a name='more'></a>அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.<br />
<br />
நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலையில் இருந்தால் தான் அங்கு அக்குடும்பத்தில் அமைதி நிலவும் என்று நினைப்பது சரியாய் இருக்காது, உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது. பொதுவாக பெற்றோர்கள் என்று எடுத்துக் கொண்டால் என்னத்தான் அவர்கள் தங்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்தாலும் எல்லாக் குழந்தைகளும் அப்பெற்றோரின் அன்பை புரிந்து நடப்பதில்லை அதனாலேயே சில வீடுகளில் பிள்ளைகளாலே பிரச்சனைகள் சூழ்ந்துக் கொண்டு குடும்பமே அவதிக்குள்ளாவதும் உண்டு.<br />
<br />
அவ்வாறில்லாமல் பெற்றொரும் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளுதல் அவசியம் அதைப் போல் பிள்ளைகளும் வளர்ந்து ஆளானதும் பெற்றொர் செய்யும் காரியங்கள் அவர்களுக்கு பிடிக்கின்றதோ இல்லையோ அவற்றை பெரிதுபடுத்தி சண்டையிடாமல் அவர்கள் மனம் வருந்தும்படியான காரியங்கள் செய்வதை தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. இன்னும் சில குடும்பத்தில் புகுந்த வீடாரின் மூலமாக பிரச்சனைகள் வந்த வண்ணம் இருக்கும் அவ்வாறன தருணங்களில் அவர்களிடம் மனம்விட்டு பேச முயற்சி செய்வது நல்லது. இல்லாவிடில் கடிதம் மூலமாகக் கூட நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் இதனால் குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக் கொண்டு செயல்பட வழிவகுக்கும். இல்லாவிடில் பகைமை வளர்ந்து வளர்ந்துப் பெரிதாகி பிரச்சனைகள் தான் வளரும்.<br />
சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பது உறவுகளுக்குள் இருக்கும் பந்த பாசத்தை வேறோடு அறுத்துவிடும், குடும்பத்தில் பெரியவர்கள் தவறு செய்தால் அவர்களை திருத்த முடியாது அது நமது வேலையும் அல்ல, அதைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசி பெரிதுபடுத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை மாறாக அவர்களை மன்னித்து விடுவதுத் தான் சாலச் சிறந்தது. ஆனால் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகள் தவறு செய்தால் அந்தந்த பெற்றோர்கள் அதை உடனுக்குடன் கண்டித்து சரி செய்ய வேணும், இதனால் பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்ந்து ஒருவரை ஒருவர் சரிசமமாகக் கருதி வளருவார்கள். <br />
குடும்பம் என்றாலே சிறிதேனும் சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான் என்று தோன்றுகின்றது அதிலிருந்து இதோ ஒரு சில யுத்திகள்: <br />
<br />
1. குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களையும் தரிசிக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.<br />
<br />
2. அடிக்கடி குடும்ப உறவுகளோடு ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும். அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம் இதுவும் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் தூண்டும். <br />
<br />
3. அதைப்போல் ஏதாவது புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.<br />
<br />
4. மேலும் குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் கஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும். <br />
<br />
5. சில சமயத்தில் குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்க்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.<br />
<br />
6. மேற்கூறிய விசயங்கள் அனைத்தும் உள்ளூரிலேயே வாழும் உறவுகளுக்குத் தான் பொருந்தும் என்பதில்லை வெளிநாடுகளில் சொர்ப்ப உறவினர்கள் அல்லது உறவுகளே இல்லாமல் தனித்து வாழும் குடும்பங்கள் கூட இவ்வாறான வழிகளைப் பின்பற்றி நட்புறவுகளைக்கூட மேன் மேலும் வளர்த்துக் கொள்ளலாம் இதனால் தனித்து வாழ்கிறோம் என்ற மனக்குறையும் அகலும்.<br />
<br />
7. இவ்வாறு குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும் ஏன் அவை தோன்றவே தோன்றாது என்றும் கூறலாம், மேலும் இவ்வாறான வாழ்க்கை முறையில் வாழ்ந்துக்காட்டி, வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தியோடு அவர்களுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாயும் இருப்போம். </div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3819374335531730428.post-23810478148751503682013-10-25T03:26:00.000-07:002013-10-25T03:26:20.864-07:00சம்பந்தியும் , குரங்கும் - வாரியார் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="http://4.bp.blogspot.com/-fXyvUIUnKOg/UmpG6Qgp8wI/AAAAAAAAAY0/iG5kG6YCHao/s1600/videofile_10July-banner-1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="230" src="http://4.bp.blogspot.com/-fXyvUIUnKOg/UmpG6Qgp8wI/AAAAAAAAAY0/iG5kG6YCHao/s400/videofile_10July-banner-1.png" width="400" /></a></div>
நம்ம ஊரில் மணமக்களின் பெற்றோர்களை சம்பந்தி என்று சொல்வோம். <br />ஆனால் இன்று அதுவும் மருவி<br /> சம்மந்தி என்று ஆகிவிட்டது.<a name='more'></a><br />
உண்மையில் சம்பந்தி என்றால் சம்- நல்ல , பந்தி: உறவு.<br />நம் வீட்டிற்கு சம்பந்தி வந்திருக்கிறார் என்றால் நல்ல உறவினர் வந்திருக்கிறார் என்பது பொருள்.<br />ஆனால் இன்று யாரும் சம்பந்தி என்று அழைப்பதில்லை.<br />சம்மந்தி என்றே அழைக்கிறோம்.<br />
அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க<br /> அம்மா சம்மந்தி வந்திருக்கிறார் சப்பாடு போடுங்க<br /> அம்மா சம்மந்தி சாப்பிட்டு முடிச்சுட்டார் தாம்பூலம் கொடுங்க<br />
என்று வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி என்றே சொல்கிறார்கள்.<br />ஆனால் சம்மந்தி என்ற வார்த்தைக்கு என்ன பொருள்<br /> சம் என்றால் நல்ல. மந்தி என்றால் குரங்கு..<br />
அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் தண்ணி கொடுங்க<br /> அம்மா நல்ல குரங்கு வந்திருக்கிறார் சாப்பாடு போடுங்க<br /> அம்மா நல்ல குரங்குக்கு தாம்பூலம் கொடுங்க<br /> என்று வார்த்தைக்கு வார்த்தை குரங்கு என்று சொல்கிறோம்.<br />
ஆனால் அவர் அதையும் பொருட்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டு சொல்கிறார்.<br />எனவே தமிழில் உச்சரிப்பை மாற்றக்கூடாது.<br />
<br />
<span style="color: #cc0000;">அவ்வையும் தமிழும் என்ற தலைப்பில் வாரியார் பேசியது</span></div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3819374335531730428.post-91618780244366677282013-10-25T02:22:00.000-07:002013-10-25T02:22:16.825-07:00சிந்தனை முத்துக்கள் !!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<strong><span style="color: #cc0000;">வாழ்க்கை</span></strong><br />
<br />
வாழ்க்கை ஒரு சொர்க்கம் அதில் காலடி பதியுங்கள்<br />
<br />
வாழ்க்கை ஒரு பள்ளி அதில் கல்வி பயிலுங்கள்<br />
<br />
வாழ்க்கை ஒரு காதல் அதை அனுபவியுங்கள்<br />
<br />
<a name='more'></a><br />
வாழ்க்கை ஒரு பரிசு அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு பாடல் அதைப் பாடிவிடுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு வனப்பு அதன் புகழ் பாடுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு சவால் அதை சமாளியுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு சாகசம் அதில் துணிவு காட்டுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு கடமை அதை செய்து முடியுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு வாய்ப்பு அதைப் பயன்படுத்துங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு வழிகாட்டி அதைப் பின்பற்றுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு பயணம் அதை தொடருங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு வாக்குறுதி அதைக் காப்பாற்றுங்கள்<br />
<br />
<br />
வாழ்க்கை ஒரு தெய்வீகம் அதைப் புரிந்துகொள்ளுங்கள்<br />
<br />
<br />என்னால் எதுவும் முடியாத - இது கோழைத்தனம் என்னால் எல்லாமெ முடியும் - இது அகங்காரமான முட்டாள்தானம். எது என்னால் மடிய வேண்டுமோஅதனை முடிக்க என்னால் முடியும். கடவுள் கருனண இருந்தால் என்பதே சரியான வாழ்க்கைப் பாதை.<br />
<strong><span style="color: #cc0000;">தன்னம்பிக்கை</span></strong><br />
இறகுகளைப் பறவைகள் பாரமாகக் கருதலாமா? பொறுப்புக்களே உங்களை உயர்த்தும் இறகுகள் பொறுப்புக்களைப் பாராமாகக் கருதாதீர்கள்.<br />
எண்ணங்கள்<br />
தூய மனமே சிந்த எண்ணங்களின் தாய்வீடு, செயலைக் கொண்டு ஒருவரை மதிப்பிட முடியாது செயலுக்குப் பின்னால் உள்ள மனநிலையே மதிக்கத்தக்கது. அந்த எண்ணங்களின் பிறப்பிடம், இருப்பிடம், ஏன் இறப்பிடம் எல்லாமே மனம் தான் அதைப்பொறுத்தே உயர்வு் உள்ளதஇதனையது உயர்வு.<br />
<strong><span style="color: #cc0000;">கல்வி</span></strong><br />
கல்வி எதை சாதிக்க வேண்டும்? படிக்கப்படிக்க என்ன தெரிய வேண்டும்? ஆஹா இவ்வளவு நாள் நாம் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்தோம் என்பதைத்தான் படிப்ப வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அறிவு வளர வளர அகம்பாவம் கரைய வேண்டும்.<br />
<strong><span style="color: #cc0000;">ஞானம்</span></strong><br />
"நான் ஏன் பிறந்தேன்?" என்னும் கேள்வி உங்களை வாழ்க்கையின் உள்ளார்நஇத பகுதிகளுக்கு அழைத்துச் செல்லும் தன்மை வாய்ந்தது. வாழ்வின் பல மர்ம முடிச்சுக்களை இக்கேள்விக்கு விடை தேடத் தொடங்குவதன் மூலமாக அவிழ்த்து விட முடியும். பல ஞானிகளும் இக் கேள்வியைத் தங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொண்டுதான் ஞானத்தின் கதவுகளைத் திறந்தார்கள். ஆன்மிகத் தேடலாய் இருந்தாலும் சரி, உலகியல் தேடலாய் இரந்தாலும் சரி இந்தக் கேள்வியை ஆரம்பமாகக் கொண்தான் அந்தத் தேடல்கள் தொடங்கியிருக்கும்.</div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3819374335531730428.post-17307802889699116122013-04-04T15:46:00.000-07:002013-04-04T15:46:16.894-07:00மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள். <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை<br />மிக மிக நல்ல நாள் - இன்று<br />மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு<br />மிகவும் வேண்டியது - பணிவு<br />மிகவும் வேண்டாதது - வெறுப்பு<br />மிகப் பெரிய தேவை - நம்பிக்கை<br />மிகக் கொடிய நோய் - பேராசை<br />மிகவும் சுலபமானது - குற்றம் காணல்<br />கீழ்த்தரமான விடயம் - பொறாமை<br />நம்பக் கூடாதது - வதந்தி<br />ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு<br />செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்<br />செய்யக் கூடியது - உதவி<br />விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்<br />உயர்வுக்கு வழி - உழைப்பு<br />நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு<br />பிரியக் கூடாதது - நட்பு<br />மறக்கக் கூடாதது - நன்றி</div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3819374335531730428.post-60821774347990578642013-04-04T15:44:00.001-07:002013-04-04T15:44:32.481-07:00இறைவன் - மதம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !<br />கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !<br />-கோவியார்<br />
<a name='more'></a><br />நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்<br /><br /><strong>பார்வைகள்</strong> : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.<br /><br /><strong>சுயமரியாதை</strong> : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு<br /><br /><strong>உடன்பாடின்மையா ?</strong> : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.<br /><br /><strong>சமத்துவம் என்பது</strong> : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.<br /><br /><strong>புரிந்துணர்வு என்பது</strong> : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே ! </div>
testhttp://www.blogger.com/profile/14757701806482180362noreply@blogger.com0